ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

ஈரமிருந்தால்..



மழைக்காலக் காளான்களாய்
உன் கவனம் ஈர்க்க முயன்று
தோற்றுப் போகிறேன்

வெகு அலட்சியமாய்க்
கடந்து போகிறாய்
உன் கண்களால் என்னை..

இந்த மழைக்காலம் போனாலென்ன?
இன்னும் உயிர்த்திருப்பேன்
ஈரம் எஞ்சியிருக்கும் வரை

ஈரமிருந்தால்
நீயும் கொஞ்சம் இடங்கொடு;
உயிர்த்திருப்பேன்
உன் நெஞ்சத்திலும்..


Twitter Bird Gadget