ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

ஈரமிருந்தால்..



மழைக்காலக் காளான்களாய்
உன் கவனம் ஈர்க்க முயன்று
தோற்றுப் போகிறேன்

வெகு அலட்சியமாய்க்
கடந்து போகிறாய்
உன் கண்களால் என்னை..

இந்த மழைக்காலம் போனாலென்ன?
இன்னும் உயிர்த்திருப்பேன்
ஈரம் எஞ்சியிருக்கும் வரை

ஈரமிருந்தால்
நீயும் கொஞ்சம் இடங்கொடு;
உயிர்த்திருப்பேன்
உன் நெஞ்சத்திலும்..


3 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஈரம் எஞ்சியிருக்கும் வரை....

அருமை...

அப்துல் காதர் சொன்னது…

கருத்துக்கு மிக்க நன்றி தனபாலன்!

அ. வேல்முருகன் சொன்னது…

ஆம்
காதல் அப்படிபட்டதுதான்

Twitter Bird Gadget