ஞாயிறு, 3 ஜூலை, 2011

கவிதை, கவிதையைத் தவிர வேறில்லை..1


அடுத்த கவிதைக்கென
தேடிக் கொண்டிருக்கையில்
தோட்டத்துக் குயில்
உதிர்த்துச் செல்கிறது
சொற்கள் சிலவற்றை..

அவற்றைக் கொண்டு
நிலவையெழுத
எத்தனிக்கையில்
அவை பறந்து செல்கின்றன
பட்டாம் பூச்சிகளென..

பின்
உறங்கும் பூனைக்குட்டியின் 
வெதுவெதுப்பான 
தழுவலைச் சொல்ல முயன்று
அதனின்றும்
வெளியேறுகின்றன அச்சொற்கள்..

தோட்டத்துக் குயில்
நிலவு
பட்டாம்பூச்சிகள்
பூனைக்குட்டி
என ஒவ்வொன்றாக
முயன்று தோற்றபின்
இறுதியில்
தன்னையே எழுதிக் கொள்கிறது 
இக்கவிதை..!        
.
.  
    

7 கருத்துரைகள்:

கவி அழகன் சொன்னது…

அருமையான கவிதை

vidivelli சொன்னது…

nallayirukkunka...........
valththukkal....

அப்துல் காதர் சொன்னது…

பாராட்டிய கவி அழகன் மற்றும் விடிவெள்ளி ஆகியோருக்கு நன்றிகள்..!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அழகிய கவிதை...

கவிதை எல்லாவற்றிலும் இருக்கிறது...
சிலசமயம் கவிதையை விட மேலானவை இந்த உலகம்..

அப்துல் காதர் சொன்னது…

நன்றி, கவிதை வீதி சௌந்தர்..

AATHI சொன்னது…

MIKA NANDRU SIR

அப்துல் காதர் சொன்னது…

நன்றி தோழரே!

Twitter Bird Gadget