சனி, 18 ஜூன், 2011

செய்வது இன்னதென அறியாதிருக்கிறாய்..

தெருவோரமாய்க்
குவித்து வைக்கப்பட்டிருக்கும்
மணலைச்
சிதறடித்து விளையாடும்
சிறுவர்களைப் போல 
உன் பார்வையால்
சிதறடித்து விடுகிறாய்
என் கவனம் மொத்தத்தையும்..

சிதறியவற்றைச் சேகரித்து
பின் நான் கட்டும்
மணல் வீடுகளையோ 
அதே சிறுவர்களின் ஆர்வத்தோடு
கலைத்துப் போடுகிறாய்
உன் புன்னகையால் மீண்டும்..

உன் செயல்கள் எதுவாயினும்
சேதமுறுவதென்னவோ 
நானாகவே இருக்கிறேன்..

பா(வம்)வி நீயோ
செய்வது இன்னதென
அறியாதிருக்கிறாய் இன்னும்..!
.
.
            

2 கருத்துரைகள்:

கதம்ப உணர்வுகள் சொன்னது…

அறிய முடியா எத்தனையோ விஷயங்களில் இதுவும் ஒன்றாகி விட்டது.

உனக்கான காதல் அவள் மனதில் உள்ளதா இல்லையா? இதை அறிய படும் பாடு கவிதையின் ஒவ்வொரு வரியிலும் மிளிர்கிறது,

அன்பு வாழ்த்துகள் காதர்.

அப்துல் காதர் சொன்னது…

தங்கள் பின்னூட்டத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி..!

Twitter Bird Gadget