செவ்வாய், 23 நவம்பர், 2010

ஆறுவதில்லை நெஞ்சம்..



மழைக்காலச் சாலையைக்
கடக்கும் ஊர்தியொன்று
சட்டென மேலே வாரியிறைத்திடும்
சேற்றைப் போல
எதிர்பாராத தருணங்களில் வீசி விடுகிறாய்
சுடு சொற்களை..!

ஆயினும்
சேற்றை உதறியவாறு
நகர்ந்து செல்லும்
வழிப்போக்கனைப் போல
அத்தனை எளிதாய்
ஆறுதல் கொள்வதில்லை
ஈரம் கசியும் விழிகளும்
காயம்பட்ட நெஞ்சமும்..!



0 கருத்துரைகள்:

Twitter Bird Gadget