சனி, 28 ஆகஸ்ட், 2010

தனிமைக் காலங்கள்


.
1.
ஆறுதலாய் நான்..
பயமற்று
எப்போதும் என்னுடனிருக்கிறது
தனிமை.
----------------------------------------------------
2.
தனித்திருக்கிறேன்..
நிலவே
நீயேனும் வருவாயா
எனதறை நிரப்ப?
----------------------------------------------------
3.
என் தனிமை
அறிமுகம் செய்து கொள்கிறது
புத்தனிடம் தன்னை.
----------------------------------------------------
4.
நீண்ட நாள் தனிமை
துயரமானது;
தற்காலிகத் தனிமை
இன்னும் துயரமானது.
----------------------------------------------------
5.
தனிமையில் அழுவதில்
வசதியிருக்கிறது;
கோழையென்று யாரும்
குற்றம் சாட்டுவதில்லை.
----------------------------------------------------
6.
கடவுள் கூட
தனித்திருப்பதில்லை
மனிதக் கற்பனையில்.
----------------------------------------------------
7.
தனித்திருக்கின்றன
வானுக்கும் மண்ணுக்கும்
இடையில்
மழைத் துளிகள்.
----------------------------------------------------
8.
காலைச் சுற்றி வரும் நாயும்
தனிமையும் ஒன்று;
துரத்தியடிப்பது
நிரந்தரத் தீர்வாகாது.
ஒன்று
நாயை வளர்க்க வேண்டும்;
இல்லை
அதைக்  கொன்று போட வேண்டும்.
.
.

3 கருத்துரைகள்:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

அருமை.......

இடி முழக்கம் சொன்னது…

உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கும் வரிகள்.. அருமை..

அப்துல் காதர் சொன்னது…

வணக்கம் இடிமுழக்கம்!

தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!

Twitter Bird Gadget