.
.
கருணையற்று
நீள்கிறது காலம்
என் கனவுகளைத் தின்றபடி..
தவிரவும்
என் கனவுகளுக்குள் அடங்காதவாறு
அது எல்லையற்றுமிருக்கிறது..
ஏதாவதொரு புள்ளியில்
காலம் என்னையோ காலத்தை நானோ
கடந்துவிடக் கூடும்..
அதன் பின்னும்
காலத்தால் தின்றழிக்கப்பட்ட
என் கனவுகள் முன்னெடுக்கப்படும்
என்னைத் தொடரும் எவனோ ஒருவனால்..
எனினும்
இன்னும் வீச்சுடன்
காலம் அப்போதும் காத்திருக்கும்
கனவுகளைத் தின்பதற்கென..!
..
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக