சனி, 3 ஜூலை, 2010

கொடும் இரவுகளும் பாழும் பகல்களும்..

.
.
நீயற்ற
ஏக்கத் தனிமையில்
நீளும் இரவுகள்
நிரம்பி வழிகின்றன
உன் கனவுகளால்..

நிலவு சுடும்
அக்கொடும் இரவுகள்
வேண்டாமென்றாலும்
விடுவதாயில்லை இயற்கை..

ஒருவேளை
அது அறிந்திருக்கக் கூடும்-
நீ மீண்டும் வந்த பின்
பாழும் பகல்கள்  வேண்டாமென்று
பரிந்துரைப்பேன் என்பதையும்..!
.
.

0 கருத்துரைகள்:

Twitter Bird Gadget