புதன், 18 ஜனவரி, 2012

புயல் : ஒரு ஏழையின் சில கேள்விகள்


கேள்வி 1:
ஏழைகளின்
கூரைகளைப் பிய்த்தெறிந்த
இந்தப் புயலை அனுப்பிய
பெருமுதலாளி யார்?
கடவுளா?

கேள்வி 2:
வாயு
பகவானா?
அரக்கனா?

கேள்வி 3:
புயல் உருவாகுமிடம்
கடலா?
நரகமா?

கேள்வி 4:
நாங்கள்
பாவிகளாக இருக்கலாம்..
இந்த மரங்களும்
பறவைகளும்
என்ன பாவம் செய்திருக்கக் கூடும்?

கேள்வி 5:
குடிசைகள் இல்லாத
உலகம் படைக்க
இப்படி ஒரு குறுக்கு வழியா?

கேள்வி 6:
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காணும் நீங்கள்
எங்கள் அழுகையில்
எதைக் கண்டு கொள்வீர்கள்?
.
.

0 கருத்துரைகள்:

Twitter Bird Gadget