சனி, 10 செப்டம்பர், 2011

குறுங்கவிதைகள்


.
1. அமாவாசை இருட்டு
    எதையோ தேடிக்கொண்டிருக்கின்றன 
    மின்மினிப் பூச்சிகள்.

2. பெருமழைக்கு அச்சாரம்
    இச்சிறு தூறலே போதும்
    மண்வாசம்.

3. எப்போது இறங்கியதெனத்  தெரியவில்லை
    நீராடிக் கொண்டிருக்கிறது
    குளத்தில் நிலா.  

4. ஆடைகள் அர்த்தமற்றவை
    அவிழ்த்தெறிகிறேன்
    இளவேனிற்கால நண்பகல்.

5. ஆடைகள் அர்த்தமுள்ளவை
    மேலும் மேலும் அணிகிறேன் 
    முன்பனிக்கால இரவு.

6. சோறுண்ண அடம்பிடிக்கும் குழந்தை
    வேடிக்கை பார்க்கிறது வெளியே 
    நாக்கில் நீர் சொட்டச் சொட்ட தெருநாய்.

7. அழகுப் பெண் 
    அருகில் அழகுக் குழந்தை
    தொலைந்த காமம்.

8. ஊற்றெடுக்கும் கவிதை
    எழுதியே ஆக வேண்டும்  
    மை தீர்ந்த பேனா.

9. ஓய்வைத் தேடும் கால்கள்
    சோராதிருக்கிறது மனம்
    இன்னும் முடியாத பயணம்.
.
.

4 கருத்துரைகள்:

திகழ் சொன்னது…

அருமை

அப்துல் காதர் சொன்னது…

நன்றி திரு.திகழ் அவர்களே..!

தமிழ்த்தோட்டம் சொன்னது…

அருமை நல்லா இருக்கு பாராட்டுக்கள்

அப்துல் காதர் சொன்னது…

பாராட்டிய தமிழ்த் தோட்டத்திற்கு நன்றி..!

Twitter Bird Gadget