சனி, 13 ஆகஸ்ட், 2011

குறுங்கவிதை



பெருங்காற்று
ஆர்ப்பரிக்கிறது மரம்
அமைதியாய் உறங்கிக் கொண்டிருக்கிறது
காக்கைக் கூட்டில் 
குயில் குஞ்சு..!
.

7 கருத்துரைகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
இதை சம நிலை மன முடையவன்
எனவும் கொள்ளலாம்
குறுங்கவிதை என தலைப்பிடாமல்
கவிதையின் கருவுக்கு ஏற்றார்ப்போல
தலைப்பிட்டிருக்கலாமோ
தரமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

தமிழ் மணம் முதல் ஓட்டு
வேர்ட் வெரிஃபிகேசனை
எடுத்தால் பின்னூட்டமிடுபவர்களுக்கு
வசதியாக இருக்கும்

அப்துல் காதர் சொன்னது…

நன்றி அய்யா..!
எனது கவிதையை நீங்கள் உணர்ந்து கொண்டவாறே மற்றவர்களும் உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன். எனவே இக்கவிதைக்கு தலைப்பு எதுவும் தேவையில்லை என்று கருதுகிறேன்.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அர்த்தமுள்ள கவிதை...

வாழ்த்துக்கள்...

அப்துல் காதர் சொன்னது…

பின்னூட்டத்திற்கு நன்றி, திரு.கவிதை வீதி சௌந்தர் அவர்களே..!

சித்திரவீதிக்காரன் சொன்னது…

காக்கை கூட்டில் குயிலின் குஞ்சு உறங்குகிறது. அருமையான வரிகள். பகிர்விற்கு நன்றி.

அப்துல் காதர் சொன்னது…

வாருங்கள் சித்திர வீதிக்காரரே!

மிக்க நன்றி!

Twitter Bird Gadget