வியாழன், 10 மார்ச், 2011

உனது சொற்கள்

.
.
எங்கிருந்தும் களவாடப்படாத 
சொற்களைக் கொண்டு 
உனக்கான கவிதையைப் படைத்திருப்பதாய்ப்  
பெருமிதம் கொள்கிறேன்..

முறுவலிப்புடன் 
நீ மறுதலிக்கிறாய்-
அவை உன்னிடமிருந்தே
களவாடப்பட்டவையென்று..

மௌனமாய்
தலை கவிழ்ந்து கொள்கின்றன
என் கவிதையில்
உன் சொற்கள்..!
.

0 கருத்துரைகள்:

Twitter Bird Gadget