.
பெயர்கள் இறைந்து கிடக்கும்
தெருக்களெங்கும்
பெயரெதுவுமற்றுத் திரிந்தேன்
பெருமிதத்துடன்..
எப்பெயரிட்டு
எனையழைப்பதென
குழம்பிப் போனவர்கள்
அழைத்து மகிழ்ந்தனர்
ஆளுக்கொரு பெயரிட்டு..
ஆளுக்கொரு பெயரிட்டதில்
அழிந்து போன எனதடையாளத்தால்
அகமகிழ்ந்தேன்; ஆனந்தம் கொண்டேன்..
ஆயினும்
அடையாளச் சிக்கல் வந்த போது
திடுக்கிட்டுப் போனவர்கள்
பின் தீர்மானித்தார்கள்
பொதுப் பெயரிட்டு அழைப்பதென..
இறுதியாய்
'பெயரற்றவன்' என்பதே
பெயராகிப் போனபின்
என் பெருமித கிரீடம்
நொறுங்கிச் சிதறியது
தெருக்களெங்கும்..!
.
.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக