வியாழன், 10 ஜூன், 2010

பறவைகளற்ற வானம்

.
.
எதிரெதிர்த் திசைகளில்
சாலையொன்றைக் கடக்க நேர்ந்தபோதுதான்
எங்களுக்குள் நிகழ்ந்தது
அந்த முதலும் கடைசியுமான சந்திப்பு..

விளங்க முடியாத
சில கவிதை வரிகளை விடவும்
ஆழமாய் இருந்தன
சாலையைக் கடந்த பின்னும்
என் மீது நீடித்திருந்த அவளின் பார்வைகள்..

திருவிழாக் கூட்டமொன்றில்
குழந்தையைப் போல
குதூகலித்திருந்தது என் மனம்..

வானத்தை நோக்கியபோது
அக்கணம் அது பறவைகளற்றிருந்தது..!
என்னை மட்டும்
பறக்க அழைத்ததாய்த் தோன்றியது..

சிறகுகளின்றிப்  பறந்த
அத்தருணத்தைப்  போலவே
இருக்கின்றன
வாழ்வின் சில தருணங்கள்
விவரிக்க முடியாதவைகளாய்..!
.
.

0 கருத்துரைகள்:

Twitter Bird Gadget